img 20250825 wa0002

வேத எண் வினா – 112 | Bible Maths Quiz| Tamil Bible Quiz with answers for youth

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆசாரியன் யோய்தா மரித்த பின் யோவாஸ் ராஜா சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என வைத்து கொள்வோம். அப்படியாயின் எந்த ராஜாவின் காலத்தில் யோய்தா பிறந்திருப்பார்?

2 thoughts on “வேத எண் வினா – 112 | Bible Maths Quiz| Tamil Bible Quiz with answers for youth”

  1. Jehoiada lived to be 130 years old -2 Chronicles 24:15
    Joash reigned for 40 years –
    2 Chronicles 24:1

    If we assume Joash lived about 12 years after Jehoiada’s death, then Jehoiada died around the 28th year of Joash’s reign (40 − 12 = 28).

    That means Jehoiada was already 102 years old when Joash became king (130 − 28 = 102).

    If we count backward through the reigns of the kings before Joash
    Ahaziah 1 year –
    2 Chronicles 22:2
    Jehoram 8 years –
    2Chronicles 21:5
    Jehoshaphat 25 years –
    2 Chronicles 20 :31
    Asa 41 years- 2 Chronicles 16:13
    Abijah 3 years- 2 Chronicles 13 : 1-2
    Rehoboam 17 years- 2 Chronicles 12 :13
    Solomon 40 years- 1 kings 11:42

    Answer:-

    Jehoiada would most likely have been born during the last years of Solomon’s reign, about 7 years before Rehoboam became king

    ( 1+8+25+41+3 +17+40=135years)

  2. யோய்தா மரித்த வயது: 130

    யோய்தா மரித்தபின் யோவாஸ் 12 வருஷம் உயிர் வாழ்ந்தார்.

    யோவாஸ் 40 வருஷம் ஆட்சி செய்தார் என்றால், அதில் கடைசி 12 வருஷங்களைக் கழித்தால், யோவாஸ் ஆட்சியின் 28-வது ஆண்டில் யோய்தா மரித்திருப்பார் (40 – 12 = 28).

    யோய்தா மரித்தபோது வயது 130. அவர் யோவாஸின் 28-வது ஆட்சி வருஷத்தில் மரித்தார் என்றால், யோவாஸ் ராஜா ஆவதற்கு முன்பே அவர் 102 வருஷங்கள் வாழ்ந்திருக்கிறார் (130 – 28 = 102).

    யோவாஸுக்கு முன் ஆண்ட ராஜாக்கள்

    அத்தாலியா: 6 வருஷங்கள்
    அகசியா: 1
    யோராம்: 8
    யோசபாத்: 25
    ஆசா: 41
    அபியா: 3
    மொத்தம்: 84

    யோவாஸ் ராஜா ஆவதற்கு முன்பிருந்த 102 வருஷங்களில், இந்த 84 வருஷங்களைக் கழித்தால் மீதி 18 வருஷங்கள் வரும் (102 – 84 = 18).

    18 வருஷங்கள் சாலமோன் ராஜாவின் கடைசிக் காலத்தைக் குறிக்கிறது சாலமோன் 40 வருஷங்கள் ஆட்சி செய்தார்

    யோய்தா, சாலமோன் ராஜாவின் ஆட்சியின் சுமார் 22-வது வருஷத்தில் பிறந்திருப்பார்.

    40 – 18 = 22 வது வருஷம்

    அதனால் விடை

    *சாலமோன் ராஜா*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *