img 20250819 wa0000

Double Quiz – 607 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதில்லை என ஆண்டவருக்கு பதிலளித்த தேவ மனிதன் யார்?

அசுத்தமான யாதொன்றும் என் வாய்க்குட்பட்டதில்லை என ஆண்டவருக்கு பதிலளித்த தேவ மனிதன் யார்?

6 thoughts on “Double Quiz – 607 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை”

  1. தானியேல்
    பேதுரு

    அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள்நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை.

    தானியேல் 10.3

    ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். அப்போஸ்தலர் 11.8

  2. Justina Muraleetharan

    எசேக்கியேல்
    எசேக்கியேல் 4:14
    பேதுரு
    அப்போஸ்தலர் 11:8

  3. அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.

    எசே 4.14

    ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். அப்போஸ்தலர் 11.8

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *